பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் விஷம்!
புத்தல பல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 17 மாணவர்களின் உணவில் விஷம் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (05) காலை பாடசாலையினால் வழங்கப்பட்ட உணவை உட் கொண்ட சிறுவர்கள் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அம் மாணவர்கள் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாறு அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் தற்போது வெல்லவாய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed